ஆப்நகரம்

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்: அச்சத்தில் வெளியேறிய மக்கள்

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

TNN 6 Mar 2017, 2:25 am
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
Samayam Tamil an earthquake measuring 4 0 on the richter scale hit parts of kutch in gujarat
குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்: அச்சத்தில் வெளியேறிய மக்கள்


குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர். அந்த நிலநடுக்கம் சில நிமிடங்களுக்கு நீடித்தது. அது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.

அந்த நிலநடுக்கம் கட்ச் மாவட்டம் ராபார் பகுதியில் இருந்து 17 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் அதிர்வுகள் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். இருப்பினும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று கட்ச் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

At around 1600 hrs an earthquake measuring 4.0 on the Richter Scale hit parts of Kutch in Gujarat.

அடுத்த செய்தி