ஆப்நகரம்

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு!

அந்தமானில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 22 May 2019, 8:01 am
அந்தமானில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
Samayam Tamil andaman


அந்தமானில் நள்ளிரவு 12.39 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, கடந்த 6ம் தேதி திருச்சியைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி பிரகாஷ், ஃபானி புயல் உருவான நிக்கோபார் தீவுக்கு அருகில் வடக்கு அந்தமான் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

பயங்கர நிலநடுக்கம் ஏற்படப் போகுது; எங்கு, எப்போது? அதிரவைத்த திருச்சி ஆய்வாளர்!



மேலும், அதே பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.5 ரிக்டர் முதல் 5 ரிக்டர் வரை பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் புவியியல் மற்றும் வானிலை மாற்றங்கள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பானி புயல் கரையை கடந்தது. இதே போன்ற புவியியல் மாற்றம் வடக்கு அந்தமான் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இன்னும் 2 வாரங்களில் 5.5 முதல் 6 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும். இனிமேல் ஏற்படும் நிலநடுக்கங்கள் அதிக அழிவை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார். அதே போன்று தற்போது நடந்துள்ளது. எனினும், பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி