ஆப்நகரம்

‘போடா டேய்’.. தமிழ் பற்றி ஆனந்த் மகிந்த்ரா பெருமிதம்!

தான் கற்றுக்கொண்ட முதல் தமிழ் வார்த்தை குறித்து ஆனந்த் மகிந்த்ரா போட்ட ட்வீட்.

Samayam Tamil 14 Jan 2022, 8:15 pm
மகிந்த்ரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்த்ரா இந்தியாவின் வெற்றிகரமான தொழிலதிபர்களில் முன்னணியில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 190 கோடி டாலர் என ஃபோர்ப்ஸ் கூறுகிறது.
Samayam Tamil anand mahindra


எனினும், பொதுவான தொழிலதிபர்களை போல அல்லாமல் ஆனந்த் மகிந்த்ரா சமூக வலைதளங்களில் கொஞ்சம் அதிகமாகவே ஆக்டிவாக இருந்து வருகிறார். தொழில் சார்ந்த விஷயங்கள், சுவாரஸியமான தகவல்கள், நகைச்சுவை என பல விஷயங்களை ஆனந்த் மகிந்த்ரா ட்விட்டரில் பகிர்வது வழக்கம்.

சமயங்களில் ஆனந்த் மகிந்த்ராவின் ட்விட்டர் பதிவுகள் வைரலாவதும் வழக்கம். அண்மையில் ஆனந்த் மகிந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் உள்ள 70 ஹேர்பின் வளைவுகளை பற்றி பகிர்ந்தார். அந்த ட்வீட் வைரலானது.

கொரோனா பாதிப்பு: புதிய உச்சம் தொடும் இந்தியா!
இந்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று ஆனந்த் மகிந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் பற்றியும், தமிழ்நாட்டில் தனது பள்ளி கால அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆனந்த் மகிந்த்ரா ட்விட்டரில், “தமிழ் ஒரு ஆற்றல் மிகுந்த மொழி. உதாரணமாக, ஆங்கிலத்தில் ‘உங்களது விளக்கத்தை கேட்டு புரிந்துகொள்ள எனக்கு நேரம் இல்லை என நினைக்கிறேன். என்னை தனியாக விட்டால் பாராட்டுவேன்’ என்பதை தமிழில் ‘போடா டேய்’ என்று சொன்னால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தனது பள்ளிப் பருவக் காலத்தில் போடா டேய் என்ற சொல்லைத்தான் முதல் தமிழ் வார்த்தையாக கற்றுக்கொண்டதாகவும், அதை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பயன்படுத்தியதாகவும் ஆனந்த் மகிந்த்ரா தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மகிந்த்ரா தனது பள்ளி பருவ காலத்தில் தமிழகத்தில் ஊட்டியில் உள்ள போர்டிங் பள்ளியில் படித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி