ஆப்நகரம்

அந்தமானில் பழங்குடியின மக்களால் அமெரிக்க சுற்றுலா பயணி கொலை

அந்தமானில் பழங்குடியின மக்களால் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது

Samayam Tamil 21 Nov 2018, 6:18 pm
அந்தமானில் வாழ்ந்து வரும் என்னும் பழங்குடியின மக்கள் சிலர், அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவரை வில் அம்பு வீசி கொலை செய்த சம்பவம் சர்வதேசளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil HY0EEJ
அந்தமானில் பழங்குடியின மக்களால் சுற்றுலா பயணி கொலை


தொழில்நுட்பம் அசுரவேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கேற்றவாறு மனிதனின் வாழ்க்கையும் நவீனமாக மாறி வருகிறது. ஆனால் இதை எதையும் அறிந்திடாமல், பிற மனிதர்களோடு தொடர்பற்ற பழங்குடியின மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆஃப்ரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நவநாகரீக மனிதன் ஆதிக்கம் செலுத்தாத பல இடங்கள் உள்ளன. அங்கு பல நூறு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் அதுபோன்ற இடமாக அந்தமான் தீவு இருந்து வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலாப் பயணியான ஜான் ஆலன், அந்தமானுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு ஏழு மீனவர்களை சந்தித்த ஜான், அவர்களுடன் பழங்குடியின மக்கள் வசிக்கும் காட்டுப் பகுதிக்கு சென்றார்.

சென்டினல் தீவு என்கிற இடத்துக்கு மீனவர்கள் ஜான் ஆலனை அழைத்துச் சென்றனர். அப்போது தங்களது பகுதிக்கு அமெரிக்கர் ஒருவர் வருவதை கண்ட பழங்குடியின மக்கள், வில் உள்ளிட்ட தங்களது ஆயுதங்களை கொண்டு சரமாரியாக ஜான் ஆலனை தாக்கியுள்ளனர்.

இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் அந்தமான் காவல்துறைக்கு தெரியவந்ததை அடுத்து, சுற்றுலா பயணி ஜான் ஆலனை சென்டினல் தீவுக்கு அழைத்துச் சென்ற 7 மீனவர்களை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, சென்டினல் இன மக்களின் மக்கள் தொகை 40 என்று தெரிய வந்துள்ளது. மேலும், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என ஏற்கனவே, அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது

அடுத்த செய்தி