ஆப்நகரம்

பேரனுக்காக ரூ.26 லட்சம் காணிக்கை செலுத்திய ஆந்திர முதல்வர்

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.26 லட்சத்தை திருப்பதி கோயிலுக்கு காணிக்கை செலுத்தியுள்ளார்.

Samayam Tamil 22 Mar 2018, 6:27 am
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.26 லட்சத்தை திருப்பதி கோயிலுக்கு காணிக்கை செலுத்தியுள்ளார்.
Samayam Tamil naidu3-647x852.


ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் நர தேவன்ஷ். மூன்று வயதாகும் இச்சிறுவனின் பிறந்தநாளை முன்னிட்டு புதன்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற சந்திரபாபு நாயுடு ரூ.26 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

இத்தொகை கோயிலில் அன்னதானம் வழங்கும் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தனது பேரன் பெயரிலேயே காணிக்கையாக செலுத்தியுள்ளார் நாயுடு.

சந்திரபாபுவுடன் தரிசனத்துக்காக அவரது மகன் நர லோகேஷ் மற்றும் அவரது மனைவி நர பிஹ்மணி மற்றும் நடிகரும் சந்திரபாபுவின் சம்பந்தியுமான பாலகிருஷ்ணா எம்எல்ஏ ஆகியோரும் உடன் சென்றனர்.

அடுத்த செய்தி