ஆப்நகரம்

எங்க கிட்ட வச்சுகாதீங்க; எழுந்து நின்னா தாங்க மாட்டீங்க- சட்டமன்றத்தில் எகிறிய ஜெகன்மோகன்!

தெலுங்கு தேசம் கட்சியினரின் குற்றச்சாட்டிற்கு, சட்டமன்றத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 12 Jul 2019, 5:21 pm
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
Samayam Tamil Jagan


ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் ஜெகன்மோகனுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று கூடிய ஆந்திர மாநில சட்டமன்றக் கூட்டத்தில், ஆளும் கட்சி மீது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

ஆட்சியைக் கைப்பற்ற துடிக்கும் பாஜக; தக்கவைக்க முயலும் குமாரசாமி!

அதாவது, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் தவறான தகவல்களை அளிப்பதாக குறிப்பிட்டனர். இதுதொடர்பாக முதல்வர் பதவி விலக தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை- கர்நாடக சபாநாயகர் உறுதி!

இதற்கு பதில் அளிக்க முயற்சிக்கையில், முதல்வர் ஜெகன்மோகன் பேச்சிற்கு தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்தனர். பின்னர் பேசிய ஜெகன், 150 உறுப்பினர்கள் எங்கள் வசம் இருக்கின்றனர்.

அயோத்தி விவகாரம்- சமரசக் குழு என்ன பண்றீங்க? உடனே இடைக்கால அறிக்கை வேண்டும்- உச்சநீதிமன்றம்!

எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள். உங்கள் பார்வைக்கு நான் பயப்பட மாட்டேன். வளர்ந்து வருவதால் பெரிய ஆள் கிடையாது. அறிவும் வளர வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளில் தொந்தரவு செய்யாமல் அமருங்கள் என்று ஆவேசமாக பேசினார்.

அடுத்த செய்தி