ஆப்நகரம்

என்னது... திருப்பதி ஏழுமலையான் சொத்துக்களை ஏலம் விடுவதா? -கொதித்தெழுந்த ஆந்திர அரசு!!

திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடும் முடிவை ஒத்திவைக்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 26 May 2020, 12:40 am
திருப்பதி ஏழுமலையானுக்கு, தமிழக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தமிழ்நாட்டில் இருக்கும் 23 சொத்துக்கள் உட்பட 50 சொத்துக்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்திருந்தது.
Samayam Tamil ttd


ஏழுமலையான் சொத்துகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவிற்கு அரசியல் கட்சியினர், பக்தர்கள் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஏழுமலையான் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யும் முடிவு தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள், விவாதங்கள், பக்தர்கள் மனநிலை ஆகியவற்றை பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் விவரித்துக் கூறினார்.

ஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் சூழ்ச்சியா? - ஜனசேனா பரபரப்பு புகார்!

இதையடுத்து,, ஆந்திர மாநில பொது நிர்வாகத் துறை இன்று உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான 50 சொத்துக்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய, 2016 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய அறங்காவலர்கள் முடிவு செய்தனர். இந்த விஷயத்தில் பக்தர்களின் நம்பிக்கை, மனநிலை உள்ளிட்டற்றை கருத்தில் கொண்டு சொத்துகளை ஏலம் விடும் முடிவை தேவஸ்தான நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக மடாதிபதிகள், பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்தி, விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட இடங்களை கோயில்கள் கட்டுவதற்கு அல்லது இந்து தர்ம பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தில் இறுதி முடிவு வரும் வரை சொத்துகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் முடிவை தேவஸ்தான நிர்வாகம் ஒத்திவைக்க வேண்டும்.
தேவஸ்தான நிர்வாக அதிகாரி உடனடியாக இதுபற்றி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி