ஆப்நகரம்

முழு சந்திர கிரகணத்திற்கு இளைஞரை நரபலி தர நண்பர்கள் முயற்சி

முழு சந்திர கிரகணத்திற்காக நண்பர்களால் நரபலி கொடுக்கப்பட இருந்த நபர், தப்பியோடி வந்து போலீசாரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Jul 2018, 2:56 am
முழு சந்திர கிரகணத்திற்காக நண்பர்களால் நரபலி கொடுக்கப்பட இருந்த நபர், தப்பியோடி வந்து போலீசாரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil pic
நரபலி பீடம் வரை சென்று தப்பித்து வந்த இளைஞர்


ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள யமனந்தல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரை நண்பர்கள் சிலர் கோயிலுக்கு செல்லலாம் என அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு வந்த நண்பர்களின் நடவடிக்கையை பார்த்த போது பிரவீனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த காட்டுப்பகுதியில் புதைகுழி வெட்டப்பட்டி பூஜை செய்வதற்கான சாமான்கள் இருந்தன.

நிலைமையை உணர்ந்த பிரவீன், தன்னை நண்பர்கள் நரபலி கொடுக்கவுள்ளதை தெரிந்துக்கொண்டு அதிர்ந்து போனார். பின்னர் அவர்களை ஏமாற்றி தந்திரமாக காட்டுப்பகுதியில் இருந்து பிரவீன் தப்பி ஓடி வந்தார்.

யூஜிவேடு என்ற பகுதிக்கு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து அவர் புகார் அளித்தார். மேலும், அந்த புகாரை காவலர்கள் பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி