ஆப்நகரம்

'பசியாக இருக்கு சார்'... ரயிலில் வந்த தமிழர்களுக்கு உணவளித்த ஆந்திர போலீசார்...

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆந்திர காவல் துரையினர் உணவுகளை வழங்கினர்.

Samayam Tamil 25 May 2020, 2:51 pm
இந்தியா முழுவதும் கடந்த 60 நாட்களுக்கு மேற்பட்டு ஊரடங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வாய்ப்பு இல்லாமல் தவித்து நின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இவர்களுக்காக சிறப்பு ரயில்களை இயங்கி வருகின்றன.
Samayam Tamil ரயிலில் வந்த தமிழர்களுக்கு உணவளித்த ஆந்திர போலீசார்


இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 1500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்தனர். அவர்கள் கொண்டுவந்த உணவு மற்றும் தண்ணீர் சிறிது தூரம் வந்தவுடன் தீர்ந்துவிட்டது. இதனால் பசியுடன் தவித்து நின்ற தொழிலாளிகள் தங்களின் நிலைமை குறித்து சென்னை மாநகர ஆணையர் ஏ. கே. விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.


இதன்படி ஏ. கே. விஸ்வநாதன் உடனடியாக ஆந்திர மாநில டிஜிபி கௌதம் சவாங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக மாநிலத்திற்கு வந்துகொண்டிருந்த சிறப்பு ரயில் ஆந்திர மாநிலம் குண்தக்கல் அருகே வந்து கொண்டிருப்பதாகவும், அதில் வந்து கொண்டிருக்கும் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவை அளிக்க வேண்டும் என்றும் இதற்கான பணத்தை அனுப்புவதாக கூறியுள்ளார்.

Modi Aarti: கடவுள் இடத்தை நிரப்பிய மோடி, பாஜகவின் அடுத்த திட்டம் இதுதானா?

அதன்படி ஆந்திர மாநில டிஜிபி கௌதம் சவங் தாங்கள் இதுபோன்ற சம்பவத்தில் சேவை செய்வதற்கு வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றி என கூறியதுடன் ரயிலில் வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவைப்பட்ட உணவு, தண்ணீர் பிஸ்கட், ரொட்டி போன்றவற்றை குண்தக்கல் போலீசார் மூலமாக உடனே வழங்கினர். இதற்கு ஆந்திர போலீசாருக்கு காவல ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

அடுத்த செய்தி