ஆப்நகரம்

எம்.பி நாக்கை அறுத்துவிடுவேன்: தலைமை காவல் அதிகாரி கடும் எச்சரிக்கை

காவல்துறையினரி தப்பாக பேசுவது எம்.பி., எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், அவர்களது நாக்கை அறுத்துவிடுவேன் என ஆந்திர மாநில காவலர் பேசியது தேசியளவில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 22 Sep 2018, 6:04 pm
காவல்துறையை தவறாக பேசும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என ஆந்திராவை சேர்ந்த காவல் மேற்பார்வையாளர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Police_officer_Symbolic_pic__1537580764
எம்.பி-க்கு கடும் கொலை மிரட்டல் விடுத்த காவல் அதிகாரி


ஆந்திராவில் உள்ள தடிபத்ரி என்ற இடத்தில் இருபிரிவினரிடையே சண்டை ஏற்பட்டது. குறைந்தளவிலான காவலர்களே இருந்ததால் சண்டையை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலுங்கு தேச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திவாகர் ரெட்டி, காவல்துறையினர் கலவரத்தை அடக்காமல், பயந்து ஓடி ஒளிந்து கொண்டதாக தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சு அம்மாநில காவல்துறையில் சலசலைப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இன்ஸ்பெக்டர் மாதவ், காவல்துறையினர் பொறுமைக்கு எல்லையுண்டு. இனிமேல் எம்.பி, எம்.எல்.ஏ தப்பாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவேன் என ஆவேசமாக தெரிவித்தார்.

காவலர் மாதவின் இந்த பேச்சுக்கு எதிராக திவாகர் ரெட்டி எம்.பி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செய்தியாளர் சந்தித்து அவர் போது, காவலர் மாதவ் சவாலை ஏற்கிறேன். முடிந்தால் நாக்கை வெட்டட்டும் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆட்சியிலிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் குறித்து அவதூறாக பேசியது தவறு. அதனால் விரைவில் காவலர் மாதவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மேலதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி