ஆப்நகரம்

இந்தளவிற்கு விலை குறைச்சாச்சு; மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மதுபானங்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 31 Oct 2020, 10:52 am
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மதுப் பழக்கத்தில் இருந்து குடிமக்களை விடுவிக்கும் வகையில் சில முக்கிய முடிவுகளை எடுத்தது. இதனால் மதுபானங்களின் விலை அதிகரித்தது. ஆனால் அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இவை முறைகேடான வகையில் ஆந்திராவில் விற்கப்பட்டன. இதனைத் தடுப்பதற்காக மாநில அரசு அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது இந்தியாவில் தயாரிக்கப்படும் மீடியம் மற்றும் பிரீமியம் பிரிவு வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil AP Liquor Price


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், பாட்டில் ஒன்றிற்கு ரூ.50 முதல் ரூ.1,350 வரை விலை குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மதுப் பழக்கத்தில் இருந்து குடிமக்களை மீட்கும் நடவடிக்கையாக கடந்த மே மாதம் ஆந்திராவில் மதுபானங்களின் விலை 75 சதவீதம் உயர்த்தப்பட்டது.

கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஆந்திராவில் இரு மடங்கு விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன. உரிய கலால் வரி செலுத்தாமல் வெளிமாநில மதுபானங்களை இறக்குமதி செய்யக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பப்ஜி கேம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஷாக்; அவ்வளவு தான் முடிஞ்சுது போங்க!

ஆனால் விளைவுகள் எதிர்மறையானது. அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் 1,211 மதுபான கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 630 வழக்குகள் தெலங்கானா, 546 வழக்குகள் கர்நாடகா, 24 வழக்குகள் ஒடிசா, 11 வழக்குகள் தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைய அறிவிப்பால் குடிமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி