ஆப்நகரம்

ஒத்தையா நின்னு அதிகாரிகளை தெறிக்கவிட்ட பாட்டி!

ஆந்திர மாநிலத்தில் மூதாட்டி ஒருவர் தனி நபராக போராட்டம் நடத்தி அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவைத்துள்ளார்.

Samayam Tamil 31 Oct 2019, 12:30 pm
எந்த பிரச்சினை என்றாலும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் மனு கொடுத்தாலும் எடுக்கப்படாத நடவடிக்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டால்மட்டுமே எடுக்கப்படும் என்ற நிலை உருவாகிவருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு மூதாட்டி ஒருவர் தனக்கு உதவித்தொகை வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
Samayam Tamil xcxc


ஜம்மு -காஷ்மீர்... இன்று வரை மாநிலம்... நாளை முதல் யூனியன் பிரதேசம் !!

சித்தூர் மாவட்டம் பலமனேரு மண்டலத்திலுள்ள வேருப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி செங்கம்மா. முதியோர் உதவித்தொகை பெற்று வந்த செங்கம்மாவுக்கு கடந்த 5 மாதங்களாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் முதியோர் உதவித்தொகை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

தனக்கு வழங்கி வந்த முதியோர் உதவித்தொகையை திடீரென நிறுத்தப்பட்டது பற்றியும், முதியோர் உதவித்தொகை கிடைக்காத காரணத்தால் தனக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கடந்த ஐந்து மாதங்களாக அவர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தார். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.

இதனால் செங்கம்மா பழமநேரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் ‘எம்எல்ஏ எனக்கு பென்ஷன் வேண்டும்’ என்று தெலுங்கில் எழுதப்பட்ட வாசகங்களுடன் கூடிய அட்டையை ஒரு கையிலும், தனக்கு பென்சன் வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை மற்றொரு கையில் ஏந்தியபடியும் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார்.

“குல்காம் தாக்குதல், உண்மை வெளியே வரவேண்டும்”

இதனால் பழமனேரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த பலமனேரு போலீசார் உண்ணாவிரத போராட்டம் துவக்கிய மூதாட்டி செங்கம்மாவை உடனடியாக அருகிலுள்ள வருவாய் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

செங்கம்மாவிடம் இருந்த ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்த அதிகாரிகள் ஐந்து மாதங்களுக்கு முன்னர் தொடர்ந்து மூன்று மாதங்கள் முதியோர் உதவி தொகை பணத்தை செங்கம்மா வாங்காத காரணத்தால் அவருடைய பெயர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. ஓரிரு நாட்களில் மீண்டும் அவருடைய பெயர் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படும் என்று உறுதி அளித்து செங்கம்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி