ஆப்நகரம்

AP Assembly: வல்லபாய் சிலையை விட உயரமாக ஆந்திராவில் சட்டசபை - முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி

வல்லபாய் சிலையை விட 68 மீட்டர் உயரம் கொண்ட புதிய சட்டசபை ஆந்திராவில் கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்

Samayam Tamil 23 Nov 2018, 1:12 pm
வல்லபாய் சிலையை விட 68 மீட்டர் உயரம் கொண்ட புதிய சட்டசபை ஆந்திராவில் கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்
Samayam Tamil Chandrababu naidu


குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபனி தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் உலகிலேயே உயரமான சிலை என்று பெயர் பெறும் வகையில் அம்மாநிலத்தில், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைக்கப்பட்டது. 182 மீட்டர் உயரம் கொண்ட வல்லபாய் சிலை அமைக்க மொத்தம் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. உலகிலேயே உயரமான சிலை என்றாலும், மூவாயிரம் கோடி ரூபாய்க்கு செலவில் இந்த சிலை தேவைதானா என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதற்குப் பதிலாக வல்லபாய் பெயரில் பத்து மருத்துவமனை கட்டியிருந்தால் கூட மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வல்லபாய் சிலைக்குப் போட்டியாக 201 மீட்டர் உயரதுக்கு ராமர் சிலை அமைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். பின்னர், கர்நாடக அரசும் தங்கள் பங்குக்கு 125 மீட்டர் உயரத்துக்கு காவேரி தாய் சிலை அமைக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில், வல்லபாய் சிலையை விட 68 மீட்டர் உயரம் கொண்ட புதிய சட்டசபை ஆந்திராவில் உள்ள அமராவதியில் கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். வல்லபாய் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. அதை விட 68 மீட்டர் உயரம் என்றால், 250 மீட்டர் உயரத்துக்கு சட்டசபை அமைக்கப்பட உள்ளது. இதுவே இந்தியாவின் மிகஉயரமான கட்டடம் என்ற பெயர் பெறும். இதற்கான வரைபட வேலைகள் முடிவடைந்து விட்டது. லண்டன் தொழில்நுட்பத்தில் நிலநடுக்கம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாதவாறு கட்டிடம் எழுப்பப்பட உள்ளது. அடுத்த மாதத்திற்குள்ளாக கட்டுமானப் பணிக்கான டெண்டர் விடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி