ஆப்நகரம்

ஆந்திராவில் கடும் வெயில்: இலவச மோருக்கு அரசு உத்தரவு

கடந்த 2015ஆம் ஆண்டைப் போல ஆந்திராவில் நடப்பாண்டிலும் வெயில் வாட்டி வதைத்து வருவதால் இலவசமாக மக்களுக்கு மோர் கொடுக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

TOI Contributor 19 Apr 2016, 10:30 am
கடந்த 2015ஆம் ஆண்டைப் போல ஆந்திராவில் நடப்பாண்டிலும் வெயில் வாட்டி வதைத்து வருவதால் இலவசமாக மக்களுக்கு மோர் கொடுக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil andhra to distribute free buttermilk to prevent sunstroke deaths
ஆந்திராவில் கடும் வெயில்: இலவச மோருக்கு அரசு உத்தரவு


ஆந்திராவில் கடந்த 2015ல் கடுமையான வெயிலுக்கு 2,000 பேர் பலியாயினர். தற்போதும் 13 மாவட்டங்களில் வெயில் வதைத்து வருவதால் இந்த மாவட்டங்களில் இலவசமாக மோர் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்திற்கு ரூ. 39 கோடி ஒதுக்கவும் முடிவு செய்ப்பட்டுள்ளது. இந்த நிதியை பொது மக்களுக்கு மோர் வழங்க மற்றும் உடலில் நீர் இழப்பைத் தவிர்க்கும் வகையில் மருத்துவ பவுடர்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ''கிராமங்களின் குடிநீர் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கவும், அதேபோல் நகரங்களுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டக் கலெக்டர்களுக்கு தலா ரூ. 3 கோடி வழங்கப்படும்.

ராயலசீமா மண்டலத்தில் மட்டும் 46 முதல் 48 டிகிரி அளவிற்கு வெப்பம் நிலவி வருகிறது. வரும் நாட்களில் இந்த வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவே செய்யும். இறப்பைத் தடுப்பதே எங்களது முக்கிய குறிக்கோள்'' என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி