ஆப்நகரம்

செல்ஃபி மோகத்தால் பாம்பிடம் கடி வாங்கி உயிரிழந்த இளைஞர்

செல்ஃபி எடுத்த போது பாம்பு கடித்ததால், இளைஞர் உயிரிழந்த அதிர்ச்சியான சம்பவம், ஆந்திராவில் நடந்துள்ளது.

Samayam Tamil 16 Nov 2018, 12:54 am
நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கல்பாடு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ், நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க சூலூர்பேட்டை சென்றிருந்தார். அப்போது அங்கே பாம்பாட்டி ஒருவர், பாம்பை வைத்து பொதுமக்களிடம் பணம் கேட்டுக்கொண்டிருந்தார்.
Samayam Tamil 100512_Snake Selfie


இதை பார்த்த ஜெகதீஷ், பாம்பாட்டியிடன் சென்று பாம்புடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு பாம்பாட்டியும் சம்மதிக்க, பாம்பை பிடித்து ஜெகதீஷின் தோள் மீது போட்டார்.

பின்னர் பாம்பை பிடித்தபடி, ஜெகதீஷ் செல்ஃபி எடுக்க முயன்றார். இதில் திடீரென பாம்பு அவரை கடித்தது. இதை சற்றும் எதிர்பாராத ஜெகதீஷ் சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். உடனே நண்பர்கள், ஜெகதீஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜெகதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். செல்ஃபி ஆசையால் பாம்பு கடிக்கு இளைஞர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி