ஆப்நகரம்

“அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதா… வேண்டாமா…?” : அன்னா ஹசாரே கருத்து!

“அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதா… வேண்டாமா…?” : அன்னா ஹசாரே கருத்து!

TOI Contributor 7 May 2017, 11:21 pm
அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் அளிக்கப்பட்டிருப்பது மன வேதனையை தருவதாக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anna hazare reaction about allegations on arvind kejriwal
“அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதா… வேண்டாமா…?” : அன்னா ஹசாரே கருத்து!


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி தொடங்குவதற்கு முன்பு, முதலமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்பு அன்னா ஹசாரேவுடன் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து பல அறவழி போராட்டங்களை நடத்தி வந்தார். அதன்பின்னர் ஆம் ஆத்மி எனும் கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்று டெல்லி முதலமைச்சராக பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சர் கபில் மிஸ்ரா பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கபில் மிஸ்ரா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் முக்கிய தலைவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதை நேரடியாக பார்த்தேன் என்று கபில் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர், கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது மனவேதனையை தருவதாக கூறினார். கெஜ்ரிவால் எங்களுடன் சேர்ந்து ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்றும் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியபின் முதல்வராகவிட்டார் என்றும் கூறினார். கெஜ்ரிவால் மீதான ஊழல் குறித்து முழுமையாக தெரியவில்லை என்றும், தெரிந்து கொண்ட பின்னர் அவர் பதவி விலகுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து வலியுறுத்துவேன் என்றும் ஹசாரே கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி