ஆப்நகரம்

லோக்பாலை நடைமுறைப்படுத்து; மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் ஹசாரே!

வரும் அக்டோபர் 2 முதல் லோக்பால் நிறைவேற்ற வலியுறுத்தி, சமூகப் போராளி அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார்.

Samayam Tamil 29 Jul 2018, 4:42 pm
ரலேகான் சித்தி: வரும் அக்டோபர் 2 முதல் லோக்பால் நிறைவேற்ற வலியுறுத்தி, சமூகப் போராளி அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார்.
Samayam Tamil Anna Hazare


ஊழலற்ற நாட்டை உருவாக்க, அனைத்து மக்களும் தனது போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அன்னா ஹசாரே அளித்த பேட்டியில், மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் எனது சொந்த ஊரான ரலேகான் சித்தி கிராமத்தில், மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன்.

கடந்த ஜனவரி 2014ல் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் கையெழுத்தால் சட்டமாக்கப்பட்டது. ஆனால் அதனை நிறைவேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஆர்வமின்றி காணப்படுகிறது.

லோக்பாலை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்திற்கு பல்வேறு காரணங்களை கூறி வருகிறது என்றார். லோக்பால் இயக்கத்தை முன்னோடியாக கருதப்படும் அன்னா ஹசாரே, கடந்த 2011ல் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு நாடு முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இதன்பிறகே லோக்பாலை சட்டமாக்க, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த வாரம் லோக்பால் குழு உறுப்பினர்கள் நியமனத்தின் மத்திய அரசின் போக்கு குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. முன்னதாக உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, பிரதமரால் தலைமை வகிக்கப்படும் லோக்பால் தேர்வுக் குழு, தனக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியது.

அதற்கான கால வரம்பை நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், சிறந்த நீதிபதி உள்ளிட்டோர் இடம்பெறுவர்.

Anna Hazare to launch hunger strike for Lokpal from October 2.

அடுத்த செய்தி