ஆப்நகரம்

Lokpal Bill: மத்தியா அரசு சொன்னதை செய்யவில்லை : அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் மிரட்டல்

அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 2 Dec 2018, 12:24 pm
புதுடெல்லி : காந்தியவாதி அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டுவரவும், லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்.
Samayam Tamil anna-hazare


சமூக ஆர்வலராக திகழும் அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியும், ஊழலுக்கு எதிராகவும் கடந்த 2011ம் ஆண்டு 288 மணிநேரம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரியும்.

மீண்டும் உண்ணாவிரதம் :
இந்நிலையில் லோக் ஆயுக்தாவை நியமிக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசின் பிரதிநிதியான அமைச்சர் கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை நேரில் சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்து விளக்கினார். அதைத் தொடர்ந்து தனது உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைத்தர்.

இந்நிலையில் மத்திய அரசு சொன்னது போல் லோக் ஆயுக்தாவை நியமிக்காமல் தாமதம் செய்து வருகிறது. விரைவாக லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை என்றால் தான் காந்தி இறந்த நாளான ஜனவரி 30ம் தேதி முதல் மீண்டும் போராட்டம் நடத்துவேன் என அன்னா ஹசாரே பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி