ஆப்நகரம்

சுக்மா மாவோயிஸ்ட் தாக்குதல்: 12 வீரர்கள் பலி

சட்டிஸ்கர் மாநிலம் சுக்மாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 12 பேர் உயிர்நீத்தனர்.

TNN 11 Mar 2017, 3:00 pm
சட்டிஸ்கர் மாநிலம் சுக்மாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 12 பேர் உயிர்நீத்தனர்.
Samayam Tamil another crpf jawan succumbs to injuries death toll reaches 12 sukma maoist attack
சுக்மா மாவோயிஸ்ட் தாக்குதல்: 12 வீரர்கள் பலி


சட்டிஸ்கரின் சுக்மாவில் இன்று மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படை சார்பில் பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புப்படை வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி சுக்மாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு இரங்கல் தெரிவிப்பாக கூறியுள்ளார். அத்துடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள பிரதமர், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்தியுள்ளார்.

மேலும், இத்தாக்குதல் குறித்த விவரங்களை அறிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கிறார். பின், தாக்குதல் நடந்த சுக்மா பகுதியைப் பார்வையிட நேரில் செல்ல இருக்கிறார்.

அடுத்த செய்தி