ஆப்நகரம்

மைசூர் வனப்பகுதியில் ஆந்திராக்ஸ் நோய் தாக்கி கால்நடைகள் பலி: மனிதர்களுக்கும் பரவுமா என்று பீதி!

மைசூர் வனப்பகுதியில் ஆந்திராக்ஸ் நோய் தாக்கி கால்நடைகள் பலி: மனிதர்களுக்கும் பரவுமா என்று பீதி!

Samayam Tamil 15 May 2018, 11:56 am
மைசூரில் உள்ள பண்டிப்பூர் வனப்பகுதியில் ஆந்திராக்ஸ் நோய் தாக்குதலில் 10 -க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil dead-cattle


மைசூர், பண்டிப்பூர் வனப்பகுதியில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் சிவப்புர கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த வாரம் 10 -க்கும் மேற்பட்ட கால்நடைகள் மர்மமான முறையில் இறந்துள்ளது கிராமவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல கடந்த 2013 ஆண்டு ஆந்திராக்ஸ் நோயின் தாக்குதலால் கால்நடைகள் உயிரிழந்துள்ளது. மேலும் 2004 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள, நாகர்ஹோல் புலிகள் சரணாலயத்தில் ஆந்திராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு யானைகள் உயிரிழந்தன. இந்த நிலையில் மீண்டும் பண்டிப்பூர் வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் ஆந்திராக்ஸ் நோயால் இறந்துள்ளன.

இந்த சம்பவத்தையடுத்து குண்டல்பேட் கால்நடைமருத்துமனையை சேர்ந்த மருத்துவர்கள் நோய் பரவாமல் தடுக்க, அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக கால்நடை மருத்துவர்மாலேஷ்கூறுகையில் ‘’ இந்தவனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது, ப்போது இறந்தகால்நடைகளில் கிராமத்தினர் ஏரிக்கு அருகில், புதைத்துள்ளனர். அதன் பிறகு மழை பெய்ததால் , இறந்த விலங்குகளில் இருக்கும் பாக்டிரியாக்கள் ஏரியில் கலந்து விட்டது.

இதனால் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள்ஆந்திராக்ஸ் நோய் தாக்கி இறந்துள்ளது. மேலும் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவே என்று கூறினார்.

அடுத்த செய்தி