ஆப்நகரம்

கலவர பூமியான டெல்லி... ஆக்ரா செல்வாரா ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டெல்லி வரவுள்ள நிலையில், அங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு(சிஏஏ) எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Feb 2020, 4:45 pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அகமதாபாத்தில் இன்று மதியம் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் எனும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியை முடித்துகொண்டு, தாஜ்மஹாலை சுற்றி பார்ப்பதற்காக, தமது குடும்பத்துடன் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.
Samayam Tamil கலவர பூமியான டெல்லி... ஆக்ரா செல்வாரா ட்ரம்ப்


இந்த நிலையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக சிஏஏ-வுக்கு எதிராக மீண்டும் நடைபெற்றுவரும் போராட்டம் இன்று உச்சத்தை எட்டியது. குறிப்பாக, வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவந்த போராட்டம் இன்று வன்முறையாக மாறியது.

ஜாஃப்ராபாத் எனுமிடத்தில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட போராட்டம் வன்முறையாக மாறியது.

போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களில் ஒருவர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார்.

அவரது துப்பாக்கியிலிருந்து எட்டு தோட்டாக்கள் பாய்ந்ததால பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று, மஜ்பூர் பகுதியிலும் வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே கலவர பூமியாக மாறியது.

FACT CHECK: மாணவர்கள் நடத்திய போராட்ட களத்தில் குவிந்த ஆணுறைகள்.! உண்மை பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று மாலை 5 மணியளவில், டெல்லி ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை குடும்பத்துடன் சுற்றி பார்க்க உள்ளார்.

இதற்காக, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டுள்ள நிலையில், டெல்லி மாநகரின் பல்வேறு பகுதிகளில் வன்முறை அரங்கேறி வருவதால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி