ஆப்நகரம்

சுதந்திரம் வேண்டும், இந்தியர்களே வெளியேறுங்கள்: ஆப்பிளில் எழுதி நூதன பிரசாரம்

சுதந்திரம் வேண்டும் என்றும், இந்தியர்களே வெளியேறுங்கள் என்று ஆப்பிளில் எழுதி நூதன பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

TNN 7 Oct 2016, 1:04 pm
சிர்சா: சுதந்திரம் வேண்டும் என்றும், இந்தியர்களே வெளியேறுங்கள் என்று ஆப்பிளில் எழுதி நூதன பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil anti india slogans written on kashmiri apples such as we want freedom
சுதந்திரம் வேண்டும், இந்தியர்களே வெளியேறுங்கள்: ஆப்பிளில் எழுதி நூதன பிரசாரம்


பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் தாக்குதலை இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டனர். இதில் ஏராளமான தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Sirsa (Haryana): (06.10.2016) Anti-India slogans written on Kashmiri apples, such as "we want freedom" & "Indian dogs go back" pic.twitter.com/8yQMr8EBLg— ANI (@ANI_news) October 7, 2016 இந்நிலையில் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்றும், இந்தியர்களே வெளியேறுங்கள் என்று காஷ்மீர் ஆப்பிள்களில் எழுதி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இவை ஹரியானா மாநிலம் சிர்சா பகுதி கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. இந்த ஆப்பிள்களை இந்திய எதிர்ப்பாளர்கள் சிலர், திட்டமிட்டு பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஏராளமான பிரிவினைவாதிகள் காஷ்மீரை தனியாக பிரித்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்திய ராணுவத்தினர் காஷ்மீரில் தொடர்ந்து அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Anti-India slogans written on Kashmiri apples, such as "we want freedom" & "Indian dogs go back".

அடுத்த செய்தி