ஆப்நகரம்

பதறவைத்த கோடி ரூபாய் கடத்தல்; திருப்பதியில் பெரும் ஷாக்!

கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 16 Jan 2021, 3:15 pm
ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்ட வனப்பகுதிகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி. இவற்றை சட்டவிரோதமாக கடத்திச் சென்று விற்பதற்கு ஏராளமான குழுவினர் இருக்கின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு என்று காவல்துறையில் தனிப்பிரிவே ஆந்திர மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil anti smuggling task force seized red sanders logs worth rs 1 crore near tirupati
பதறவைத்த கோடி ரூபாய் கடத்தல்; திருப்பதியில் பெரும் ஷாக்!


சிக்கும் அப்பாவி தமிழர்கள்

இவர்களின் கண்காணிப்பையும் மீறி அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்காக பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவர்களை அழைத்துச் சென்ற ஏஜெண்ட்கள் தப்பிச் சென்றுவிடுவதால் போலீசாரிடம் அப்பாவி தமிழர்கள் சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. இதன் உச்சபட்சமாக செம்மரக் கடத்தலில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறியிருக்கிறது.

அதிரடி படைக்கு ரகசிய தகவல்

இந்த சூழலில் சிறப்பு அதிரடி படை டிஎஸ்பி வெங்கடைய்யா, ஆர்.எஸ்.ஐ வாசு, சுரேஷ், ஜானி பாஷா ஆகியோர் அடங்கிய காவல்துறையினருக்கு கடந்த வாரம் ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து திருப்பதி அருகேவுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் ஆய்வு செய்தனர். கடந்த வாரம் வியாழன் முதல் எஸ்.வி. விலங்கியல் பூங்காவிற்கு அருகேவுள்ள பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.


பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி... மோடி வாழ்த்து!

செம்மரக் கட்டைகள் கடத்தல்

இந்நிலையில் பெருமல்லபாளி கிராமம் அடுத்த எஸ்.வி. நகர் மயானம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மினி ட்ரக் ஒன்று வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ஏராளமான செம்மரக் கட்டைகள் கடத்திச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. இதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓட்டுநர் உள்ளிட்டோரை கைது செய்யும் முயற்சிக்கும் போது, அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

அதிரவைக்கும் மதிப்பு

இதையடுத்து ட்ரக்கில் இருந்த 49 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் எடை 1.5 டன் என்று தெரிவித்துள்ளனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று கூறபப்ட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதன் பின்னணியில் எந்த குழுவினர் இருக்கின்றனர் என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆபத்தான சேஷாசலம் வனப்பகுதி

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் கண்காணிப்பையும் மீறி வனப்பகுதிக்குள் நுழைந்து சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


100 கோடியை வசூலித்து 'மாஸ்டர்' படம் சாதனை!

அடுத்த செய்தி