ஆப்நகரம்

இந்தியாவில் அனுமதியளிக்கப்படாத நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகள் விற்பனை!

இந்தியாவில் அனுமதியளிக்கப்படாத நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக இங்கிலாந்து நாளிதழ் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Feb 2018, 5:47 pm
இந்தியாவில் அனுமதியளிக்கப்படாத நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக இங்கிலாந்து நாளிதழ் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil antibiotics sold in india pose global superbug threat
இந்தியாவில் அனுமதியளிக்கப்படாத நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகள் விற்பனை!


அனுமதியளிக்கப்படாத 5 லட்சம் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் ஆண்டுதோறும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதாக இங்கிலாந்து ஆராய்ச்சியளார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில், அமைந்துள்ள ராணிமேரி மற்றும் நியூகேஸ்டில் பல்கலைக்கழகமும், இணைந்து நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.( British Journal of Clinical Pharmacology)

அதில் அதிகளவிலான நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் பெரும்பாலான நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகள் விற்பனைக்கு அனுமதியளிக்கப்படாதவையாகும்.

சட்டவிரோதமாக விற்கப்படும் மாத்திரைகள்!

கடந்த 2007 முதல் 2012ஆம் ஆண்டு வரை அனுமதி அளிக்கப்படாத 64 சதவீத நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகள், சட்டவிரோதமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 118 வகையான நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகள் அடக்கம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அனுமதிக்கப்பட்டதில் 4 சதவீதம் மாத்திரைகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் மருந்து விற்பனை முறைப்படுத்துதல் முறை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் அலிசன் பொல்லாக் Allyson Pollock, என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி