ஆப்நகரம்

சிபிஐ சர்ச்சை: ராவ் நியமனம் செல்லாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட நான்கே நாட்களில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Jan 2019, 11:34 pm
சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட நான்கே நாட்களில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Samayam Tamil nageshwara-rao-1543282536-1547466657


வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதில், புதிய சட்டத்தின்படி சிபிஐக்கு இடைக்கால இயக்குனர் என ஒருவரை நியமிக்க முடியாது எனவும் முழுப்பொறுப்புடன் புதிய இயக்குநரைத்தான் நியமிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது மற்றொருவராக லஞ்சப் புகார்களைக் கூறிவந்தனர். இதனால் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

தொடர்ந்து அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தீயணைப்புத் துறைக்கு மாற்றி பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு உத்தரவிட்டது.

அடுத்த செய்தி