ஆப்நகரம்

புயலால் பாதிக்கப்பட்ட முதியவரை தோளில் சுமந்து காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு

கேரளா மாநிலத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட முதியவரை அம்மாநில காவல்துறை அதிகாாி ஒருவா் தோளில் சுமந்து சென்று காப்பாற்றினாா். அவருக்கு தற்போது பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

TOI Contributor 6 Dec 2017, 3:23 pm
கேரளா மாநிலத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட முதியவரை அம்மாநில காவல்துறை அதிகாாி ஒருவா் தோளில் சுமந்து சென்று காப்பாற்றினாா். அவருக்கு தற்போது பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Samayam Tamil appreciation for cop who rescued old man
புயலால் பாதிக்கப்பட்ட முதியவரை தோளில் சுமந்து காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு


கன்னியாகுமாி மற்றும் கேரளாவை ஓகி புயல் கடுமையாக தாக்கியது. கேரளா மாநிலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் பல்வேறு தரப்பினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனா். அதேபோன்று காவல்துறை அதிகாாி ஆண்ட்ரூஸ் என்பவரும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது ஒரு பகுதியில் மழை நீருக்கு நடுவே வீட்டை விட்டு வெளியே வரமுடியத நிலையில், 75 வயது ஆண்டனி என்ற முதியவா் அயக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தாா். அவரை காப்பாற்ற சென்ற ஆண்ட்ரூஸ் முதியவரை தோளில் சுமந்து மீட்டாா். அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.



அந்த வீடியோவை பாா்த்த பலரும் ஆண்ட்ரூஸ்க்கு வாழ்த்து தொிவித்தனா். மேலும் போலீஸ் கமிஷனா் தினேசும் வாழ்த்து தொிவித்து பாிசு வழங்கினாா். இதுதொடா்பாக ஆன்ட்ரூஸ் கூறுகையில், புயல் நேரத்தில் சூழல் மிகவும் மோசமாக இருந்தது. மக்களை மீட்டதற்காக நான் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. அந்த வீடியோ வைரலானதையடுத்து ஏராளமானோர் என்னைத் தொடர்புகொண்டு பாராட்டுகின்றனர். அதையே, பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.

அடுத்த செய்தி