ஆப்நகரம்

ட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளிகை!!

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார்.

Samayam Tamil 25 Feb 2020, 9:35 pm
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொண்டார்.
Samayam Tamil ட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: களைகட்டிய குடியரசுத் தலைவர் மாளிகை


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த இந்த விருந்தில் பங்கேற்பதற்காக தமது மனைவி மெலானியாவுடன் அவர் இரவு 8 மணியளவில குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். டொனால்ட் ட்ரம்ப், மெலானியாவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் கைகுலுக்கி வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் தமது குடும்பத்தினருடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

டொனால்ட் ட்ரம்ப்புக்கு தயாராகும் உணவுகளும், இசைக் கச்சேரியும்!!

தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிப்பாக, யாரும் எதிர்பாராத விதமாக, டொனால்ட் ட்ரம்ப் உடனான இரவு விருந்தில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர், ட்ரம்புடன் கைகுலுக்கி அவருக்கு வாழ்த்துதெரிவித்தார்.

ட்ரம்ப் வேணாம்பா, அம்மாதா முக்கியம், முதல்வர் பழனிசாமி தேர்தல் வியூகம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்த மூன்று நாளாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு விருந்து அளிப்பது அவசியமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி