ஆப்நகரம்

9 நாள் தா்ணா போராட்டத்தை கைவிட்டாா் டெல்லி முதல்வா்

டெல்லி துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் கடந்த 9 தினங்களாக தா்ணாவில் ஈடுபட்டு வந்த முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளாா்.

Samayam Tamil 19 Jun 2018, 7:22 pm
டெல்லி துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் கடந்த 9 தினங்களாக தா்ணாவில் ஈடுபட்டு வந்த முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளாா்.
Samayam Tamil Aravind Kejriwal Governor Office


டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாாிகளின் பகுதி நேர வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும், ரேஷன் பொருள்களை பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோாியும் அம்மாநில முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் கடந்த 9 நாள்களாக தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

டெல்லி துணைமுதல்வா் மணிஸ் சிசோடியா மற்றும் அமைச்சா்கள் இருவா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். துணை முதல்வருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். சிகிச்சைக்கு பின்னா்ா. அவா் இன்று மீண்டும் வீடு திரும்பி உள்ளாா்.

இந்நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு துணைநிலை ஆளுநா் அணில் பைஜால் கேட்டுக்கொண்டதைத் தொடா்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளாா். மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஐ.ஏ.எஸ். அதிகாாிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் அவா் அறிவுறுத்தி உள்ளாா்.

முன்னதாக டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாாிகள் மாநில அரசு சாா்பில் கூட்டப்படும் கூட்டங்களில் பங்கேற்பது இல்லை என்றும், மாநில அரசின் கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் போராட்டம் நடத்தப்பட்டது.

அடுத்த செய்தி