ஆப்நகரம்

ராணுவ வீரர்களை கெளரவித்த ஆகாஷ் அம்பானி திருமண நிகழ்ச்சி!

ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் திருமண நிகழ்ச்சியின்போது நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் , காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Samayam Tamil 13 Mar 2019, 4:01 pm
ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் திருமண நிகழ்ச்சியின்போது நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் , காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
Samayam Tamil 10b42b0e-d411-4502-adee-b7dbe0bbdb63


முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மும்பை திருபாய் அம்பானி சதுக்கத்தில், இசைக்கு ஏற்ப நீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சியான இசை நீரூற்று நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் 1,500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த இசை நிக்ழ்ச்சியில் பங்கேற்பதற்கு பாதுகப்பு படை வீரர்கள், காவல்துறை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முகேஷ் அம்பானி நிடா அம்பானியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இந்த அழைப்பை ஏற்ற 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய நீடா அம்பானி, இந்த நாட்டை பாதுகாப்பவர்கள் எங்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கேற்பது மகிச்சியளிக்கிறது. நாட்டை காப்பாற்றும் நாயகர்களான நீங்கள் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக்கா மேத்தாவுக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி