ஆப்நகரம்

அதிநவீன அபாச்சீ ஹெலிகாப்டர்களைப் பெறும் இந்திய ராணுவம்...!

ராணுவத்திற்கு அதிநவீன அபாச்சீ ஹெலிகாப்டர்களைப் பெறுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

TNN & Agencies 18 Aug 2017, 8:55 am
டெல்லி: ராணுவத்திற்கு அதிநவீன அபாச்சீ ஹெலிகாப்டர்களைப் பெறுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
Samayam Tamil army to get six heavy duty apache attack helicopters
அதிநவீன அபாச்சீ ஹெலிகாப்டர்களைப் பெறும் இந்திய ராணுவம்...!


கடந்த 2015 செப்டம்பரில், அமெரிக்காவிடம் இருந்து 11 அதிநவீன அபாச்சீ ஹெலிகாப்டர்களையும், 22 சாப்பர்களையும் பெற ரூ.13,952 கோடி மதிப்பில் இந்திய ராணுவத்துடன் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் மத்திய அரசு ஒப்பந்தம் அளிக்கவில்லை. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில் அமெரிக்கா உடனான ராணுவத் தளவாடங்கள் பெறும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் ரூ.490 கோடி மதிப்பீட்டில் உக்ரைனிடம் இருந்து ஷோர்யா கேஸ் டர்பைன் இன்ஜின்களையும், ரஷ்யாவில் இருந்து கிரிகோரிவிச் - க்ளாஸ் ஃபிரைகேட்ஸ்களையும் பெற ஒப்புதல் பெறப்பட்டது.

கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற மோடி-புடின் உச்சி மாநாட்டில், இந்தியா தரப்பில் 4 பில்லியன் டாலர்கள் செலவில் 4000 டன் கிரிகோரிவிச் - க்ளாஸ் ஃபிரைகேட்ஸ்கள் 4 பெற முடிவு செய்யப்பட்டது.

இதில் 2 ரஷ்யாவின் யந்தர் கப்பல் கட்டுமான தளத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. மற்ற 2 கோவாவில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் உருவாக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் படி வரும் 2019ஆம் ஆண்டு ஜூலை முதல், 22 அபாச்சீ, 812 AGM-114L-3 ஹெல்ஃபையர் லாங்பௌ ஏவுகணைகள், 542 AGM-114R-3 ஹெல்ஃபையர் - II ஏவுகணைகள், 245 ஸ்டிங்கர் ப்ளாக் I-92H ஏவுகணைகள் மற்றும் 12 AN/APG-78 தீ கட்டுப்பாட்டு ரேடார்கள் ஆகியவை இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும்.

Finally, Army to get six heavy-duty Apache attack helicopters.

அடுத்த செய்தி