நடப்பாண்டில் இதுவரை தீவிரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்கள் காரணமாக, 64 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாகவும், இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்சம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 18 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடப்பாண்டில் நடைபெற்ற உச்சபட்ச தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.
அதேசமயம், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2016ம் ஆண்டின் இதுவரையான காலத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 64 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக, தெற்காசிய தீவிரவாத தாக்குதல்கள் கண்காணிப்பு தளம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் இந்திய அளவில் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, மொத்தம் 69 ராணுவ வீரர்கள் உயிர்நீத்ததே அதிகபட்சமாகும். இதேகாலத்தில், பொதுமக்கள் உயிரிழப்பதை வெகுவாகக் கட்டுப்படுத்தி, இந்திய ராணுவத்தினர் சாதனை படைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 1990 தொடங்கி, 2007ம் ஆண்டு வரையும் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சராசரியாக, ஆண்டுதோறும் 800 பொதுமக்கள் உயிரிழந்துவந்தனர். இது தற்போது பலத்த முயற்சிகளுக்கு இடையே கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
The army’s combat death toll in Jammu and Kashmir (J&K) is 64 this year (until September 18), the highest since 2010, when 69 soldiers died, according to the South Asia Terrorism Portal (SATP).
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 18 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடப்பாண்டில் நடைபெற்ற உச்சபட்ச தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.
அதேசமயம், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2016ம் ஆண்டின் இதுவரையான காலத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 64 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக, தெற்காசிய தீவிரவாத தாக்குதல்கள் கண்காணிப்பு தளம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் இந்திய அளவில் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, மொத்தம் 69 ராணுவ வீரர்கள் உயிர்நீத்ததே அதிகபட்சமாகும். இதேகாலத்தில், பொதுமக்கள் உயிரிழப்பதை வெகுவாகக் கட்டுப்படுத்தி, இந்திய ராணுவத்தினர் சாதனை படைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 1990 தொடங்கி, 2007ம் ஆண்டு வரையும் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சராசரியாக, ஆண்டுதோறும் 800 பொதுமக்கள் உயிரிழந்துவந்தனர். இது தற்போது பலத்த முயற்சிகளுக்கு இடையே கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
The army’s combat death toll in Jammu and Kashmir (J&K) is 64 this year (until September 18), the highest since 2010, when 69 soldiers died, according to the South Asia Terrorism Portal (SATP).