ஆப்நகரம்

பிரபல டிவி விவாத நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்

டைம்ஸ் நவ் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு பாகிஸ்தான தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித்ததால், அவருக்கு ‘Y பிரிவு’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

TNN 17 Oct 2016, 9:43 am
டைம்ஸ் நவ் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித்ததால், அவருக்கு ‘Y பிரிவு’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil arnab goswami to get y category security cover over threat from pak based terror groups
பிரபல டிவி விவாத நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்


டைம்ஸ் நவ் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியினால் மிகவும் பிரபலமான அர்னாப் கோஸ்வாமி அண்மையில் நடந்த உரி தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். இதனால் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஒரு தீவிரவாத அமைப்பினால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக புலனாய்வுத்துறை, உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு ‘Y பிரிவு’ பாதுகாப்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும், அவர் அருகில் இரு பாதுகாப்பு வீரர்களும், அவரை சுற்றி 20 பாதுகாப்பு வீரர்கள் மற்றவர்களுக்கு தெரியா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஜி செய்தி தொலைகாட்சியின் சுதிர் சவுதிரிக்கு ‘X பிரிவு’ பாதுகாப்பும், சமாச்சார் பிளஸ் செய்தி தொலைகாட்சியின் உமேஷ் குமாருக்கு ‘Y பிர்வு’ பாதுகாப்பும், அஸ்வினி குமார் சோப்ராவுக்கு ‘Z பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

அடுத்த செய்தி