ஆப்நகரம்

பிபிசி பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது

மக்களை மிரட்டி பணம் பறித்தாக பிபிசி-யின் முன்னாள் பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

TOI Contributor 27 Oct 2017, 4:35 pm
மக்களை மிரட்டி பணம் பறித்தாக பிபிசி-யின் முன்னாள் பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil arrested journalist vinod verma being framed since i have sex video of minister rajesh munat police planted cd
பிபிசி பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது



பிபிசி ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவர் வினோத் வர்மா. இவர் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு தீர்வு காணும் விதமாக புலனாய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், சத்தீஸ்கர் மாநில அமைச்சர் ஒருவரின் ஆபாச வீடியோ சிடியை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் காஷியாபாத்தில் உள்ள தனது இல்லத்தில் வினோத் வர்மாவை, அங்குள்ள சிலரை மிரட்டி பணம் பறித்தாக போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர் வீட்டில் இருந்து சுமார் 300 சிடிக்கள், பெண்டிரைவ் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வினோத் வர்மா கூறுகையில், தன்னிடம் சத்தீஸ்கர் அமைச்சர் ராஜேஷ் முன்னாத் என்பவருடைய ஆபாச சிடி இருப்பதாகவும், இதற்காகவே தன்னை போலீஸ் கைது செய்வதாகவும் கூறினார்.

அடுத்த செய்தி