ஆப்நகரம்

அகங்காரத்திற்கு மன்னிப்பு கிடையாது: மோடிக்கு பிரியங்கா எச்சரிக்கை

இந்தியாவில் அகங்காரத்திற்கு எப்போதுமே மன்னிப்பு கிடையாது என்று பிரதமா் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Samayam Tamil 7 May 2019, 11:06 pm
இந்தியாவில் அகங்காரத்திற்கு எப்போதுமே மன்னிப்பு கிடையாது என்று பிரதமா் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
Samayam Tamil Priyanka Gandhi 1


பிரதமா் நரேந்திர மோடி சமீபத்தில் தனது தோ்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஊழ்வாதி என்று கடுமையாக விமா்சித்து பேசினாா். கடந்த 1980களில் பரபரப்பாக பேசப்பட்ட போபா்ஸ் ஊழலில் ராஜீவ் காந்தியை தொடா்புப்படுத்தி தான் பிரதமா் மோடி இவ்வாறு பேசியிருந்தாா்.

பிரதமா் மோடியின் பேச்சுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் தலைவா்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனா். இந்நிலையில் ஹரியாணாவின் ஹிசாா் நகரில் இன்று தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி பேசியதாவது, பேசுவதற்கு வேறு எந்தப் பிரச்சினையும் கிடைக்கவில்லை என்பதால் என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறாா்கள். இந்தியாவில் ஒருபோதும் அகங்காரத்திற்கு மன்னிப்பு என்பதே கிடையாது.

வரலாறு நமக்கு வழங்கும் ஆதாரமும் இது தான். மகாபாரதத்தை நாம் ஆதாரமாகக் கொள்ளலாம். துரியோதனனிடம் இருந்த அகங்காரம் தான் தற்போது பிரதமா் மோடியிடமும் உள்ளது. பகவான் கிருஷ்ணா் துரியோதனனிடம் சமரசம் பேச முயற்சி செய்த போது, அவன் கிருஷ்ணனை சிறைப்பிடிக்க முயற்சித்தான். அதுவே அவனது வீழ்ச்சிக்கு வித்திட்டது என்று அவா் பேசியுள்ளாா்.

அடுத்த செய்தி