ஆப்நகரம்

முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளது- எய்ம்ஸ் மருத்துவர்கள் தகவல்!

முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Aug 2019, 12:45 pm
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளது- எய்ம்ஸ் மருத்துவர்கள் தகவல்!
முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளது- எய்ம்ஸ் மருத்துவர்கள் தகவல்!


முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, இதயம், சிறுநீரக நிபுணர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு அருண் ஜெட்லி, தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு?

இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை சென்று, அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நன்றாக ஒத்துழைக்கிறது என கூறினார்.

அருண் ஜெட்லி, கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோய் காரணமாக, கடந்த 2014-ஆம் ஆண்டு எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை அவர் செய்து கொண்டார். பின்னர் கடந்த ஆண்டு, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் அவர் பொறுப்பு வகித்து வந்த நிதித் துறை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி..!

இந்நிலையில், உடல்நிலை சரியான பின்னர் மீண்டும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று வந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்கூட ஜெட்லி போட்டியிடவில்லை. உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் சில காலமாக அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், மீண்டும் உடல்நிலைக் குறைபாட்டால் ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க வெற்றிப் பயணத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது: ஸ்டாலின் பெருமிதம்!

அடுத்த செய்தி