ஆப்நகரம்

மத்திய அரசுக்கு வருமானம் வந்தால் விவசாயிகளுக்கு உதவித்தொகை அதிகரிக்கப்படும்: ஜெட்லி

மத்திய அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Feb 2019, 3:45 pm
மத்திய அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil arun-jaitley


அண்மையில் அறிவிக்கப்பட்ட இடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள சிறு,குறு விவசாயிகளுக்கு வருடம்தோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதம மந்திரியின் விவசாய நல நிதியின் கீழ் வழங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது: ‘விவசாயிகளின் நலனில் அதீத அக்கறை கொண்டே மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இதற்காக வருடந்தோறும் 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வரும் காலங்களில் மத்திய அரசின் வருமானம் அதிகரிப்பதற்கு ஏற்ப, உதவித்தொகையும் அதிகரிக்கப்படும். இது தவிர விவசாயிகளுக்கா வீடு வசதி, சாலை, சமையல் கேஸ், மின்வசதி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

விவசாயிகளுக்காக மத்திய அரசு இந்த அளவுக்கு திட்டங்களை அமல்படுத்தியதைப் போல், மாநில அரசுகளும் தங்களது நிதி ஒதுக்கீடு செய்யும் போது விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்’. இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்

அடுத்த செய்தி