ஆப்நகரம்

சீனப் பயணம் பாதியில் நிறைவு - நாடு திரும்பினார் அருண் ஜெட்லி

சீனாவில் நடைபெறும் ஆசிய உட்கட்டமைப்பின் முதலீட்டு வங்கியின் தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சென்றிருந்தார். ஆனால் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பாதியிலேயே நாடு திரும்பியுள்ளார்.

TNN 27 Jun 2016, 6:08 pm
டெல்லி: சீனாவில் நடைபெறும் ஆசிய உட்கட்டமைப்பின் முதலீட்டு வங்கியின் தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சென்றிருந்தார். ஆனால் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பாதியிலேயே நாடு திரும்பியுள்ளார்.
Samayam Tamil arun jaitley return to india without finish his visit
சீனப் பயணம் பாதியில் நிறைவு - நாடு திரும்பினார் அருண் ஜெட்லி


கடந்த ஜூன் 24ம் தேதி, 5 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சீனா சென்றிருந்தார். 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென நாடு திரும்பியுள்ளார்.

முன்னதாக சீன நிதியமைச்சர் ஜிவே, தேசிய வளர்ச்சி சீர்திருத்த ஆணைய தலைவர் ஜூஷோஷி, மக்கள் வங்கி ஆளுநர் சூவா உள்ளிட்டோரை நேற்றே அருண் ஜெட்லி சந்தித்தார். அருண் ஜெட்லி திடீரென தனது பயணத்தை முடித்துக் கொண்டதற்கு, அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் ஷாக்திந்தா தாஸ் ஆகியோரை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்து பேசியதால், அருண் ஜெட்லி அதிருப்தியில் உள்ளதாகவும், இதன் காரணமாகவே அவர் விரைவாக நாடு திரும்பியதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி