முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவை 2014ஆம் ஆண்டு ஏற்பட்டபோது, நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். கார்ப்பரேட் விவகாரங்கள் துறையையும் அவரே கவனித்தார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பார்க்கர் உடல்நலம் குன்றியபோது பாதுகாப்புத்துறையையும் நிர்வகித்தார். உடல்நலக்குறைவு காரணமாக 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.
நிதி அமைச்சராக இருந்த பணிக் காலத்தில் அருண் ஜேட்லி பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.
1. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி மத்திய அரசு அப்போதைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. பாஜக இதனை ஊழல், கறுப்புப்பணம், கள்ள நோட்டு, பயங்கரவாதம் போன்றவற்றை ஒழிக்க எடுத்த நடவடிக்கை எனக் கூறி மத்திய அரசு பெருமிதப்பட்டது.
அருண் ஜெட்லி காலமானார்: எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை2. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. 5%, 12%, 18% மற்றும் 28% நான்கு அடுக்குகளில் வரி வசூல் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த நாளான ஜூலை 1ஆம் தேதியை ஆண்டுதோறும் மத்திய அரசு ஜிஎஸ்டி தினமாகக் கொண்டாடுகிறது.
3. திவால் நிலை ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை வரையறுக்க புதிய திவால் சட்டம் 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஒரு தனியார் நிறுவனமோ அல்லது பங்குதாரர் நிறுவனமோ அல்லது தனி நபரோ தான் வாங்கிய கடனைஅடைக்க இயலாமல் திவால் ஆகும்போது கடன் வாங்கியவருக்கும், கொடுத்தவருக்கும் இடையே ஒரு சுமூகமான நிலையை கையாள்வதே இதன் நோக்கம்.
4. கருப்புப் பண தடுப்புச் சட்டம் 20105ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன்படி, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துகளின் பட்டியலை வெளியிட்டால் கடுமையான அபராதம், சிறைத் தண்டனை ஆகியவற்றுக்குப் பதிலாக, பதுக்கிய பணத்தின் 30 சதவீதம் மட்டும் அபராதம் செலுத்தினால் போதும்.
அருண் ஜேட்லியின் நீண்ட அரசியல் பயணம்...
5. பினாமி பரிவர்த்தனைகள் தடுப்பு திருத்தத் சட்டம், 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பினாமி சொத்துக்கள், பரிவர்த்தனைகள் பற்றி வருமான வரித்துறையிடம் ரகசியமாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு பினாமி சொத்து மதிப்பில் பத்து சதவீதம் பரிசு வழங்கப்படுகிறது.
6. நேரடி மானிய திட்டத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் தரப்பட்டதால் மத்திய அரசால் 1.20 லட்சம் கோடி ரூபாய் வரை சேமிக்க முடிந்திருக்கிறது. இத்திட்டத்தின்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றுக்கான மத்திய அரசின் மானியத் தொகை நேரடியாக பயனாளரின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது.
7. பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைத்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கி உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டது. வங்கிகளின் வாராக்கடன் சுமையைச் சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
8. விலைவாசி நிலையாக இருக்கும் வகையில் பணவீக்க விகிதத்தை கட்டுக்குள் வைப்பது பற்றி, ரிசர்வ் வங்கி மற்றும் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நிதிக் கொள்கை ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி நிதிக் கொள்கை குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆண்டுக்கு நான்கு முறை கூடுகிறது. 2021 மார்ச் 31 வரை வருடாந்திர பணவீக்க விகிதத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் பேண இக்குழுவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பணிக் காலத்தில் அருண் ஜேட்லி பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.
1. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி மத்திய அரசு அப்போதைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. பாஜக இதனை ஊழல், கறுப்புப்பணம், கள்ள நோட்டு, பயங்கரவாதம் போன்றவற்றை ஒழிக்க எடுத்த நடவடிக்கை எனக் கூறி மத்திய அரசு பெருமிதப்பட்டது.
அருண் ஜெட்லி காலமானார்: எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை2. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. 5%, 12%, 18% மற்றும் 28% நான்கு அடுக்குகளில் வரி வசூல் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த நாளான ஜூலை 1ஆம் தேதியை ஆண்டுதோறும் மத்திய அரசு ஜிஎஸ்டி தினமாகக் கொண்டாடுகிறது.
3. திவால் நிலை ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை வரையறுக்க புதிய திவால் சட்டம் 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஒரு தனியார் நிறுவனமோ அல்லது பங்குதாரர் நிறுவனமோ அல்லது தனி நபரோ தான் வாங்கிய கடனைஅடைக்க இயலாமல் திவால் ஆகும்போது கடன் வாங்கியவருக்கும், கொடுத்தவருக்கும் இடையே ஒரு சுமூகமான நிலையை கையாள்வதே இதன் நோக்கம்.
4. கருப்புப் பண தடுப்புச் சட்டம் 20105ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன்படி, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துகளின் பட்டியலை வெளியிட்டால் கடுமையான அபராதம், சிறைத் தண்டனை ஆகியவற்றுக்குப் பதிலாக, பதுக்கிய பணத்தின் 30 சதவீதம் மட்டும் அபராதம் செலுத்தினால் போதும்.
அருண் ஜேட்லியின் நீண்ட அரசியல் பயணம்...
5. பினாமி பரிவர்த்தனைகள் தடுப்பு திருத்தத் சட்டம், 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பினாமி சொத்துக்கள், பரிவர்த்தனைகள் பற்றி வருமான வரித்துறையிடம் ரகசியமாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு பினாமி சொத்து மதிப்பில் பத்து சதவீதம் பரிசு வழங்கப்படுகிறது.
6. நேரடி மானிய திட்டத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் தரப்பட்டதால் மத்திய அரசால் 1.20 லட்சம் கோடி ரூபாய் வரை சேமிக்க முடிந்திருக்கிறது. இத்திட்டத்தின்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றுக்கான மத்திய அரசின் மானியத் தொகை நேரடியாக பயனாளரின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது.
7. பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைத்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கி உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டது. வங்கிகளின் வாராக்கடன் சுமையைச் சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
8. விலைவாசி நிலையாக இருக்கும் வகையில் பணவீக்க விகிதத்தை கட்டுக்குள் வைப்பது பற்றி, ரிசர்வ் வங்கி மற்றும் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நிதிக் கொள்கை ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி நிதிக் கொள்கை குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆண்டுக்கு நான்கு முறை கூடுகிறது. 2021 மார்ச் 31 வரை வருடாந்திர பணவீக்க விகிதத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் பேண இக்குழுவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.