ஆப்நகரம்

அருணாச்சல்: பெரும்பான்மை நிரூபிக்கும்படி முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவு

அருணாச்சலப் பிரதேசத்தில், முதலமைச்சர் நபாம் துகி, வரும் 16ம் தேதியன்று பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என, அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

TNN 14 Jul 2016, 10:59 pm
அருணாச்சலப் பிரதேசத்தில், முதலமைச்சர் நபாம் துகி, வரும் 16ம் தேதியன்று பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என, அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil arunachal pradesh governor asks cm nabam tuki to prove his majority by july 16
அருணாச்சல்: பெரும்பான்மை நிரூபிக்கும்படி முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவு


அம்மாநிலத்தில் நபாம் துகி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலம் தொடர வேண்டும் என்றும், இதில் ஆளுநர் தலையிடக்கூடாது என்றும் நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நபாம் துகி முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், ஆளுநர் ஜோதிபிரசாத் ராஜ்கோவா இன்று வெளியிட்ட அறிக்கையில், வரும் 16ம் தேதியன்று முதலமைச்சர் நபாம் துகி, சட்டப்பேரவையை கூட்டி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவரது ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார். அதேசமயம், மிகக்குறுகிய காலத்தில், எம்எல்ஏ.,க்கள் ஆதரவு கோருவது இயலாத காரியம் என, முதலமைச்சர் நபாம் துகி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி