கடந்த 2013ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட் மீது ஏறி, மாற்றுத் திறனாளி இந்திய வீராங்கனை அருணிமா சின்ஹா(30) சாதனை படைத்தார். இவர் தான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் முதல் மாற்றுத் திறனாளி ஆவார்.
தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி வீராங்கனையான இவர், ரயிலில் இருந்து கொள்ளையர்களால் தள்ளி விடப்பட்டதில் தனது இடது காலை இழந்தார். இருப்பினும் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் சாதிக்கத் துடித்தார்.
இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் உத்வேகம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மிகப்பெரிய மலைகளில் ஏறி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
இதற்காக 2015ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்த சூழலில் இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலக்குகளை நோக்கி கடுமையாக போராட வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் ஒருநாள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும். எனக்கு கிடைத்துள்ள முனைவர் பட்டம், உலக அளவில் இளைஞர்களுக்கான ஒரு ஊக்கம் என்று கூறினார்.
தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி வீராங்கனையான இவர், ரயிலில் இருந்து கொள்ளையர்களால் தள்ளி விடப்பட்டதில் தனது இடது காலை இழந்தார். இருப்பினும் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் சாதிக்கத் துடித்தார்.
இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் உத்வேகம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மிகப்பெரிய மலைகளில் ஏறி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
இதற்காக 2015ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்த சூழலில் இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலக்குகளை நோக்கி கடுமையாக போராட வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் ஒருநாள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும். எனக்கு கிடைத்துள்ள முனைவர் பட்டம், உலக அளவில் இளைஞர்களுக்கான ஒரு ஊக்கம் என்று கூறினார்.