டெல்லி: லோக்பால் சட்டத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மத்திய அரசு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் உள்ளிட்டவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னா ஹசாரே பங்கேற்றார். அப்போது பேசிய அவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானதும் லோக்பால் போராட்டத்தை மறந்துவிட்டார் என்று விமர்சித்தார்.
“நான் ஒரு துறவி. எனக்கு எந்த தேவையும் இல்லை.” என்று கூறிய அவர், லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது வேதனை அளிக்கிறது என்றார். உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் லோக்பால் சட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்றார்.
தற்போதைய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மற்றும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோரையும் ஹசாரே தாக்கிப் பேசினார். 2011ஆம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் வெற்றிகரமான முடிவை எட்ட வழிவகை செய்யவில்லை என்று அவர்கள் மீது குற்றம்சாட்டினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னா ஹசாரே பங்கேற்றார். அப்போது பேசிய அவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானதும் லோக்பால் போராட்டத்தை மறந்துவிட்டார் என்று விமர்சித்தார்.
“நான் ஒரு துறவி. எனக்கு எந்த தேவையும் இல்லை.” என்று கூறிய அவர், லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது வேதனை அளிக்கிறது என்றார். உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் லோக்பால் சட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்றார்.
தற்போதைய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மற்றும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோரையும் ஹசாரே தாக்கிப் பேசினார். 2011ஆம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் வெற்றிகரமான முடிவை எட்ட வழிவகை செய்யவில்லை என்று அவர்கள் மீது குற்றம்சாட்டினார்.