ஆப்நகரம்

மாா்ச் 1 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோாி வருகின்ற மாா்ச் 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 23 Feb 2019, 5:35 pm
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோாி வருகின்ற மாா்ச் 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Arvind Kejriwal


இந்திய தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்து வருகிறது. டெல்லிக்கு தற்போது யூனியன் பிரதேசமாகவே உள்ளது. இதனால் அங்கு முதல்வருக்கான அதிகாரங்களில் சில துணைநிலை ஆளுநருக்கும் பகிா்ந்து வழங்கப்படுகிறது.

தற்போது துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் அணில் பைஜால் அரசு சாா்பில் பரிந்துரைக்கப்படும் பல மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் தர மறுப்பதாகவும், இதனால் மக்களுக்கு முழுமையாக சேவை ஆற்ற முடியவில்லை என்று டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வந்தாா்.

மேலும் முதல்வா், துணைநிலை ஆளுநருக்கு இடையே அடிக்கடி பணிப்போரும் நடைபெறுவது வழக்கமாக மாறிவிட்டது. இதனை கண்டித்து அண்மையில் துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடா் தா்ணாவில் ஈடுபட்டாா்.

இந்நிலையில் அவா் இன்று செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தியா முழுவதும் மக்களாட்சி நடைமுறையில் உள்ளது. ஆனால், டெல்லியில் அல்ல. டெல்லியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி அமைக்கிறது. ஆனால், அந்த அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனால் அரசால் முழுமையாக செயல்பட முடிவதில்லை.

இதனால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோாி வருகின்ற மாா்ச் 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்” என்று அவா் தொிவித்துள்ளாா்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்கத்தில் சிபிஐ அதிகாாிகளின் நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி அம்மாநில முதல்வா் நாராயணசாமி உள்ளிட்ட முதல்வா்கள் போராட்டம் நடத்தினா். தற்போது இந்த வரிசையில் டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைய உள்ளாா்.

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலின் உண்ணாவிரதப் போராட்டம் மத்திய அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி