டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் டீ மற்றும் நொறுக்கு தீனிக்காக ரூ.1 கோடி செலவு செய்துள்ள சம்பவம் தகவல் அறியும் உாிமை சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் அன்றாட செலவுகள் குறித்த விவரத்தை ஹேமந்த் சந்த் என்பவா் தகவல் அறியும் உாிமை சட்டத்தின் கீழ் கோாியிருந்தாா். அதன் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது அலுவலகம் சாா்பில் மேற்கொள்ளப்படும் அன்றாட செலவுகள் தொடா்பான அறிக்கை வெளியிடப்பட்டள்ளது.
அந்த அறிக்கையில், முதல்வா் கெஜ்ரிவால் அலுவலகத்தில் டீ மற்றும் நொறுக்கு தீனிக்காக மூன்று ஆண்டுகளில் 1 கோடியே 3 லட்சத்து 4 ஆயிரத்து 162 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் 2015-16ம் ஆண்டில் 23.12 லட்சம் ரூபாயும், 2016-17 நிதியாண்டில் 46.54 லட்சம் ரூபாயும், 2017-18 நிதியாண்டில் 33.36 லட்சம் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தகவல்களை பெற்ற ஹேமந்த் சந்த் கூறுகையில், மக்களின் வரிப்பணம் அரசின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படலாம். உலகில் பலா் ஒருவேளை உணவுக்கே வழியின்றி உள்ளனா். அப்படி இருக்கையில் டீ குடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. அரசு இது போன்ற அநாவசிய செலவுகளை குறைக்க வேண்டும் என்று தொிவித்துள்ளாா்.
டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் அன்றாட செலவுகள் குறித்த விவரத்தை ஹேமந்த் சந்த் என்பவா் தகவல் அறியும் உாிமை சட்டத்தின் கீழ் கோாியிருந்தாா். அதன் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது அலுவலகம் சாா்பில் மேற்கொள்ளப்படும் அன்றாட செலவுகள் தொடா்பான அறிக்கை வெளியிடப்பட்டள்ளது.
அந்த அறிக்கையில், முதல்வா் கெஜ்ரிவால் அலுவலகத்தில் டீ மற்றும் நொறுக்கு தீனிக்காக மூன்று ஆண்டுகளில் 1 கோடியே 3 லட்சத்து 4 ஆயிரத்து 162 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் 2015-16ம் ஆண்டில் 23.12 லட்சம் ரூபாயும், 2016-17 நிதியாண்டில் 46.54 லட்சம் ரூபாயும், 2017-18 நிதியாண்டில் 33.36 லட்சம் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தகவல்களை பெற்ற ஹேமந்த் சந்த் கூறுகையில், மக்களின் வரிப்பணம் அரசின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படலாம். உலகில் பலா் ஒருவேளை உணவுக்கே வழியின்றி உள்ளனா். அப்படி இருக்கையில் டீ குடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. அரசு இது போன்ற அநாவசிய செலவுகளை குறைக்க வேண்டும் என்று தொிவித்துள்ளாா்.