ஆப்நகரம்

ஓய்வு பெற்ற டிரைவரை கௌரவித்த கலெக்டர்

​ மகராஷ்ரா மாநில கலெக்டர் ஒருவர் தனக்கு பணியாற்றிய டிரைவரை, அவரது ஓய்வு பெறும் நாளன்று சிறப்பான முறையில் கௌரவித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

TNN 4 Nov 2016, 4:28 pm
மகராஷ்ரா மாநில கலெக்டர் ஒருவர் தனக்கு பணியாற்றிய டிரைவரை, அவரது ஓய்வு பெறும் நாளன்று சிறப்பான முறையில் கௌரவித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
Samayam Tamil as farewell gift collector drives chauffeur to work on retirement day
ஓய்வு பெற்ற டிரைவரை கௌரவித்த கலெக்டர்



மகராஷ்ரா மாநிலம் அகாலா மாவட்டத்தில் ஸ்ரீகாந்த் என்ற இளம் அதிகாரி கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு டிரைவராக பணியாற்றி வந்தவர் திகாம்பர் தக். திகாம்பர் தக் 35 ஆண்டுகளுக்கு மேலாக 18 கலெக்டர்களுக்கு சிறப்பான முறையில் டிரைவராக பணியாற்றி வந்து அனைவரிடத்திலும் நல்ல மதிப்பை பெற்றவர்.

திகாம்பர் தக் தனது பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். இவரது ஓய்வை அம்மாவட்ட கலெக்டரான ஸ்ரீகாந்த் சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்தார். அதனடிப்படையில் கலெக்டர் தனது காரை திருமணத்திற்கு அலங்கரிப்பது போல அலங்கரித்து தத்தை காரின் பின் இருக்கையில் அமர வைத்து கலெக்டரே அந்த காரை ஓட்டி அவரது விட்டிற்கு கொண்டு சென்று விட்டு கௌரவப்படுத்தினார்.

இந்த சம்பவத்தால் திகாம்பர் தக் மட்டுமல்லாது இந்த காட்சியை பார்த்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த கலெக்டர் கூறும் போது " கடந்த 35 ஆண்டுகளாக இவர் அரசிற்காக டிரைவராக பணியாற்றியுள்ளார். தினமும் கலெக்டராகிய எங்களை பாதுகாப்பாக பணியிடங்களுக்கு அழைத்துச் சென்றார். இதானால் அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் தனது ஓய்வு பெறும் நாளில் மறக்காமல் இருபதற்கும் இந்த நிகழ்வை நடத்தி அவரை கௌரவித்தேன் " என்று கூறினார்.

அடுத்த செய்தி