ஆப்நகரம்

மோடியும் அமித்ஷாவும் – அர்ஜூனர், கிருஷ்ணரா? ரஜினியை மடக்கிய ஒவைசி!

மோடி, அமித்ஷா பற்றி ரஜினியின் புகழாரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி எதிர்கேள்வி கேட்டுள்ளார்.

Samayam Tamil 14 Aug 2019, 1:33 pm
மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜூனர் என்றால், இந்தியாவில் இன்னொரு மகாபாரத போர் நடக்க வேண்டுமா என்று ரஜினிகாந்துக்கு எம்.பி அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil Asaduddin Owaisi Rajinikanth


அண்மையில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியிட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த பங்கேற்றார். அப்போது காஷ்மீர் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய ரஜினி, ‘மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜூனர் போன்றவர்கள். ஆனால், யார் கிருஷ்னர், யார் அர்ஜூனர் என்பதை கூறமாட்டேன்’ என்று கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷாவிற்கு இப்படியொரு பாராட்டு - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு!

ரஜினிகாந்தின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. ஒரு புறம் பாஜகவினர், அடேங்கப்பா ரஜினி எவ்வளவு அழகா பேசுகிறார். நல்ல சரியான உதாரணம் தான். நமக்கு ஏன் இது போன்று தோன்றவில்லை என்று பாஜகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். மறுபுறம் ரஜினியை விமர்சிப்பவர்கள், அவருக்கு இதெல்லாம் தேவையா? என்று பேசி வருகின்றனர்.

(பிரதமருடன் சேர்ந்து சந்திரயான் 2 பார்க்கலாம்!)

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் மஜ்லீஸ் கட்சித் தலைவருமான ஒவைசிரஜினியின் உதாரணம் கூறித்து விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், ‘மோடியும், அமித்ஷாவும் அர்ஜூனர் கிருஷ்னர் போன்றவர்கள் என்று பெரிய நடிகர் ஒருவர் கூறுகிறார். அது ஒரு புறம் இருக்கட்டும். அப்படி என்றால் யார் கெளரவர்கள், யார் பாண்டவர்கள்? இந்தியாவில் இன்னொரு மகாபாரத போர் நடக்க வேண்டுமா? போர் நடந்தால், அதில் தோல்விடையும் கெளரவர்கள் யார்?’ இவ்வாறு ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தி வரதரை தரிசனம் செய்தார் ரஜினிகாந்த் - வீடியோ உள்ளே

அடுத்த செய்தி