ஆப்நகரம்

போபாலில் அஷ்டமி பூஜையை கொண்டாடிய பெண்கள்

அஷ்டமி தினத்தை முன்னிட்டு வாரணாசி மற்றும் போபாலில் பூஜை செய்து தேவியை வழிபட்டனர்.

TNN 9 Oct 2016, 9:12 am
இந்துக்களின் வழிபாடுகளில் முக்கிய இடம் நட்சத்திரங்களுக்கும், தேதிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள் மற்றும் தேதிகளுக்கு ஏற்ப விரதங்கள், பண்டிகைகள் வருகின்றன.
Samayam Tamil ashtami puja being performed in bhopal
போபாலில் அஷ்டமி பூஜையை கொண்டாடிய பெண்கள்


சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி, ஆவணி மாதம் ஆவணி அவிட்டம், தை மாதம் தை அமாவாசை என்று கொண்டாடுகிறோம். அந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு பூர்வ பட்ச பிரதமை தேதியில் ஆரம்பித்து நவமி தேதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி விழாவாகும்.

Ashtami Puja underway in Varanasi #Navratri2016 pic.twitter.com/filmWADJJX — ANI UP (@ANINewsUP) October 9, 2016 நவமி முடிந்த அடுத்த நாள் தசமி ஆகும். நவராத்திரி முடிந்தவுடன் வரும் தசமி விஜயதசமி என்று சிறப்பிக்கப்படுகிறது. அதாவது அஷ்டமி, நவமி, தசமி ஆகிய இந்த மூன்று திதிகளும் மிக முக்கியமாக கருதி பூஜை செய்யப்படுகிறது. இதன் காரணமாக அஷ்டமி தினத்தை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் மத்தியபிரதேச மாநிலம் போபாலிலும் பெண்கள் பூஜை செய்து துர்கா தேவியை வணங்கினர்.
Ashtami Puja being performed in Bhopal #Navratri2016 pic.twitter.com/vNi2JL6nMb — ANI (@ANI_news) October 9, 2016 மேலும், மேற்கு வங்க மாநிலத்திலும் துர்கா தேவிக்கு சிறப்பு ஆராதனைகளும், வழிபாடுகளும் நடந்தது. Devotees gather at a #DurgaPuja pandal in Siliguri, West Bengal pic.twitter.com/1cAkZEYriX — ANI (@ANI_news) October 9, 2016

அடுத்த செய்தி