ஆப்நகரம்

சபரிமலையில் அரங்கேறிய ஆச்சரியம்; ஐய்யப்ப பக்தர்கள் ஹேப்பி!

ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறக்கப்பட்டுள்ளதால் ஐய்யப்ப பக்தர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்

Samayam Tamil 14 Jan 2021, 3:15 pm
உலகப் புகழ் வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். சபரிமலையில் கோயில் கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பனை ‘அன்னதான பிரபு’ என்றே பக்தர்கள் அழைப்பர். எனவே ஐயப்ப தர்மத்தின்படி இங்கு தரிசனம் செய்ய வருகின்ற அனைத்துப் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யப்படுகின்றது.
Samayam Tamil சபரிமலை
சபரிமலை


இதற்காக, தேவஸ்வம் போர்டு ‘சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா அன்னதான டிரஸ்ட்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. சபரிமலைக்கும் பிற கோயில்களுக்கும் வருகைதரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.

அன்னதானம் வழங்குவதற்காக மாளிகைப்புறம் கோயிலின் பின்புறத்தில் அன்னதான மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய மண்டபங்களுள் ஒன்று. நாள் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் வசதிகளையும் தேவசம் போர்டு இங்கு செய்துள்ளது.

மகரஜோதி தரிசனம்: சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இந்த நிலையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பேருக்கு குறையாமல் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இட வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தை அமைச்சர் சுரேந்திரன் திறந்து வைத்துள்ளார்.

அடுத்த செய்தி