ஆப்நகரம்

டெங்குவால் உயிரிழந்த நீதிபதிக்கு அசாம் முதல்வர் இரங்கல்

டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த அசாம் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியின் மறைவிற்கு அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

TNN 13 Nov 2016, 5:57 pm
கவுகாத்தி: டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த அசாம் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியின் மறைவிற்கு அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil assam cm sonowal condolence hc judge who dies by dengu fever
டெங்குவால் உயிரிழந்த நீதிபதிக்கு அசாம் முதல்வர் இரங்கல்


அசாம் மாநிலம் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நிஷிதந்த் சவுத்திரி (55), திடீரென டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நீதிபதி உயிரிழந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாக இருக்கும் சவுத்திரியின் மறைவிற்கு, அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Assam CM sonowal condolence HC judge who dies by dengu fever

அடுத்த செய்தி