அஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அஸாம் சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனேவால் வெள்ளத்தால் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அரசு தொடர்ந்து கவனமாக செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினார். வெள்ளத்தில் மீட்கப்பட்ட சுமார் 80000 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கவுகாத்தியில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மிதப்பதால் விலங்குகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.
அஸாம் சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனேவால் வெள்ளத்தால் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அரசு தொடர்ந்து கவனமாக செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினார். வெள்ளத்தில் மீட்கப்பட்ட சுமார் 80000 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கவுகாத்தியில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மிதப்பதால் விலங்குகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.