ஆப்நகரம்

மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்; ஸ்டேட் போர்டில் படித்தால் முன்னுரிமை - அசத்தல் அறிவிப்புகள்!

’பிரக்யான் பாரதி’ திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்கள் வழங்க திட்டமிட்டிருப்பதாக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Aug 2020, 6:09 am
வருங்கால சமுதாயத்தைக் கட்டமைப்பதில் இன்றைய மாணவ, மாணவிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே அவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது அவசியம். குறிப்பாக பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். இதுவே ஒட்டுமொத்த சமூகத்திற்குமான கல்வியாக மாறுகிறது. இதையொட்டி அசாம் மாநில அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. அப்படியென்ன அறிவிப்பு என்கிறீர்களா?
Samayam Tamil Assam Girl Students


இதுபற்றி அசாம் மாநில கல்வித்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ’பிரக்யான் பாரதி’ திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பில் முதல் டிவிஷனில் தேர்ச்சி பெறும் மாணவிகள் சுமார் 22,000 பேருக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும். ஸ்டேட் போர்டில் படித்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஒரு ஸ்கூட்டரின் விலை ரூ.50,000 முதல் ரூ.55,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்க அனுமதி வேண்டுமா? - அப்போ இதை செய்யுங்க...மத்திய அரசுக்கு அஸ்ஸாம் அரசு நிபந்தனை!!

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெற விரும்பும் மாணவிகள் sebaonline.org என்ற அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஸ்கூட்டர்கள் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஸ்கூட்டரை யாரும் விற்க முடியாது. மேலும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அசாமில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் நடத்த முடியவில்லை. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் கணக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

undefinedஎங்கள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசு வேலை- முதல்வர் அறிவிப்பு!

இதில் போதிய மதிப்பெண் கிடைக்காத காரணத்தால் உயர்கல்வி சேர்க்கையில் அசாம் மாணவர்கள் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர். ஆனால் ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் முறையாக நடத்தப்பட்டு முடிவுகள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி